உலகம்

ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்!

Published

on

ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்!

ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழனன்று (26) சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறியது.

இதன் விளைவாக சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் தாமதம் ஏற்பட்டதுடன், பயணச்சீட்டு விற்பனையும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள நிறுவனம்,

ஜப்பானிய விமான சேவை அதன் உள் மற்றும் வெளிப்புற அமைப்புகளில் காலை 7:24 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒரு கணினி செயலிழப்பைப் எதிர்கொண்டது.

இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டது.

Advertisement

இதையடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு பின்னர் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு புதுப்பிப்பை வெளியிட்டது.

அதில் காலை 8:56 மணிக்கு (உள்ளூர் நேரம்) பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததாகக் கூறியது.

அதேநேரம், இன்று புறப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான பயணத் சீட்டு விற்பனையை நிறுத்தியதாகவும் அது கூறியது.

Advertisement

ஜப்பான் ஏர்லைன்ஸ் 1951 ஒகஸ்ட் 1 இல் நிறுவப்பட்டது.

விமான நிறுவனம் அதன் செயல்பாடுகளை ஒரு தனியார் நிறுவனமாகத் தொடங்கியது, ஆனால் அது விரைவில் அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாறியது.

1987 இல், விமான நிறுவனம் மீண்டும் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டது.

Advertisement

விமானத்தின் முக்கிய மையங்கள் டோக்கியோவின் நரிடா மற்றும் ஹனேடா விமான நிலையங்களிலும், ஒசாக்காவின் கன்சாய் மற்றும் இடாமி விமான நிலையங்களிலும் அமைந்துள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version