இலங்கை

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக மனு தாக்கல்!

Published

on

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக மனு தாக்கல்!

இலங்கைப் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில், அரசியல் தேவை காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

துணைவேந்தர் பதவிக்கு தகுதியான அதிகாரியை நியமிப்பதில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை பொறுப்புக்கூற வேண்டியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version