உலகம்

லண்டன் நடைபாதையில் காரை செலுத்திய நபர் – கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது!

Published

on

லண்டன் நடைபாதையில் காரை செலுத்திய நபர் – கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது!

மத்திய லண்டனில் நத்தார் தினம் அதிகாலையில் நடைபாதையில் ஒரு காரை ஓட்டிச் சென்று, கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

நள்ளிரவு 12.45 மணிக்கு நடந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

31 வயதான காரை ஓட்டிச் சென்றவர் கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் பயங்கரவாதம் தொடர்பானது அல்ல என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூ லண்டனின் ஒரு முக்கிய சாலையாகும். சம்பவம் நடந்த குறுகிய நேரத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“சந்தேக நபர் தனது காரை ஏறி நடைபாதையில் ஏற்றுவதற்கு முன்பு ஒரு இரவு விடுதியில் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது,” என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version