இலங்கை

வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை

Published

on

வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை

  ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய நாடாளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Advertisement

தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

புதிய பாராளுமன்றத்தில் கடமையாற்றும் எம்.பி.க்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும், அவர்களுக்கு வாகனங்களை எப்போது ஒதுக்குவது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை.

அவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள வாகனங்களையும் இறக்குமதி செய்ய மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

Advertisement

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க புதிய அரசு முடிவு செய்துள்ளது.

அதோடு வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version