இலங்கை

ஓடிக்கொண்டிருந்த வேனின் சக்கரம் கழன்று ஒருவர் பலி

Published

on

ஓடிக்கொண்டிருந்த வேனின் சக்கரம் கழன்று ஒருவர் பலி

 கண்டி – குருநாகல் வீதியில் ஓடிக்கொண்டிருந்த வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாரகம பகுதியில் நேற்று (26) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதியுடன் பின் இருக்கையில் இருந்த மூவரும், வேனின் சாரதியும் பலத்த காயமடைந்து மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கண்டி, தொடவெல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

Advertisement

சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version