இலங்கை

பொலிஸ் பரிசோதகர் விபத்தில் உயிரிழப்பு

Published

on

பொலிஸ் பரிசோதகர் விபத்தில் உயிரிழப்பு

  ஹபரணை – திருகோணமலை வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் பொலிஸ் பரிசோதகர், லொறி மற்றும் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

விபத்தில் பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

காரில் இருந்த ஒரு பெண் மற்றும் 4 மாத கைக்குழந்தை, மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தை அடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version