இலங்கை

மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; தன்னைத்தானே சாட்டையால் அடித்த அண்ணாமலை

Published

on

மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; தன்னைத்தானே சாட்டையால் அடித்த அண்ணாமலை

 தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் தன்னைத்தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை ‘கவன ஈர்ப்பு’ போராட்டம் நடத்தினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறித்த மாணவிக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும், தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை காலணிகள் அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்றையதினம் 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை ‘கவன ஈர்ப்பு’ போராட்டம் நடத்தினார்.

Advertisement

அதேவெளை அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்குக் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version