இலங்கை
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயினுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயினுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான இளைஞன் ஒருவர் இன்று மதியம் யாழ். பொம்மைவெளியில் வைத்து 120 மில்லிக்கிராம் உயிர்கொல்லி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.