இலங்கை

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த பெண் பாதசாரி!

Published

on

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த பெண் பாதசாரி!

மாத்தளையில் உள்ள கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் பலாபத்வல பகுதியில் நேற்றையதினம் (27-12-2024) இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் பாதசாரி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த சம்பவத்தில் மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version