இலங்கை

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் : ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

Published

on

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் : ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்க மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28.12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது, விமான நிலைய வளாகத்தில் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

Advertisement

இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் கூட்டு கமரா அமைப்பு மற்றும் கூட்டு கண்காணிப்பு அறையை நிறுவுமாறு ஜனாதிபதி பணித்தார்.

மேலும், தற்போதுள்ள ஸ்கேனிங் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேனிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்களில் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான நடைமுறை புதிய செயல்முறையை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டு மக்கள் மத்தியில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள் தொடர்பில் நிலவும் தவறான கருத்துக்கள் களையப்பட்டு, கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version