இலங்கை

இரவு நேர தபால் ரயிலில் மோதி உயிரிழந்த நபர்… அம்பலாங்கொடை சம்பவம்!

Published

on

இரவு நேர தபால் ரயிலில் மோதி உயிரிழந்த நபர்… அம்பலாங்கொடை சம்பவம்!

மருதானையிலிருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (28-12-2024) அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறித்த சம்பவத்தில் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version