இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பெண் அதிரடி கைது!

Published

on

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பெண் அதிரடி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கேய்னுடன் வெளிநாட்டு பெண் ஒருவரை விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் கானாவில் இருந்து வந்தவர் எனவும், அவர் தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்றையதினம் (29-12-2024) அதிகாலை 1.50 மணியளவில் கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

குறித்த சம்பவத்தில் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணிடம் இருந்து சுமார் 4,068 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் பெறுமதி 142 மில்லியன் ரூபா என சுங்க பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version