இலங்கை

காணாமல்போனவர் கடலில் சடலமாக மீட்பு

Published

on

காணாமல்போனவர் கடலில் சடலமாக மீட்பு

மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தை இன்று (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ராசு (வயது-59) என்ற குடும்பஸ்தர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Advertisement

அவர் கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குடும்ப உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

மீனவர்கள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட கடற்படையினர் சௌத் பார் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version