இலங்கை

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது ; கஜேந்திர குமார் பொன்னம்பலம்

Published

on

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது ; கஜேந்திர குமார் பொன்னம்பலம்

தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையை தொடர்கின்ற வகையில் கட்சியினுடைய முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை சரியாக புரிந்து கொண்டு ,

Advertisement

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருசிலருடைய ஆதிக்கத்தை கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாக தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலை தள்ளும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறினார்

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்

தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையினால் அந்தக் கட்சியை தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது என்றும் கூறினார்.

Advertisement

ஒரு பொதுப்புள்ளியில் சந்திப்பதற்கு தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஸ்ரீதரன் உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதேபோல் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறினார்.

இந்த பேச்சுவாரத்தைகளை அடுத்த ஆண்டில் முன்கொண்டு செல்ல எதிர்பாரப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி சரியான மாற்றங்களை செய்யுமானால் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு சுபீட்சமாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version