இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Published

on

மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 49 சாரதிகள் மீதும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 110 சாரதிகள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,086 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், 694 சாரதி அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறிய குற்றங்களுக்காகவும், 5,324 சாரதிகள் மற்ற போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 7,676 சாரதிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version