இலங்கை

மருத்துவமனை சூழலில் நாய்த்தொல்லை – அச்சத்தில் நோயாளர்கள்!

Published

on

மருத்துவமனை சூழலில் நாய்த்தொல்லை – அச்சத்தில் நோயாளர்கள்!

யாழ்ப்பாணம் – சங்கானை மருத்துவமனையிலும் அதன் சுற்றாடலிலும், மருத்துவமனையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய மருத்துவ அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சேவையினை பெறச்செல்லும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் வளாகம், பிரதான நுழைவாயில், அருகிலுள்ள வீதிகள் மற்றும் சந்திகளில் அதிகளவிலான நாய்கள் உலவித்திரிகின்றன. இதனால் நோயாளர்கள் மட்டுமின்றி வீதியால் செல்வோரும் விபத்து ஏற்படுமோ அல்லது நாய்கள் கடிக்குமோ என்கின்ற அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

Advertisement

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது தாம் நாய்க்கடிக்குள்ளாகுவமோ என்கின்ற அச்சம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மருத்துவமனைச் சுற்றாடலில் அவை மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதால் பெரும் சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ப)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version