இலங்கை

யாழில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியான பரபரப்பு காரணம்

Published

on

யாழில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியான பரபரப்பு காரணம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (30-12-2024) இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான தேவதாஸ் திலீப்குமார் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டி பகுதியில் உள்ள நகை உற்பத்தி செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் குறித்த நபர் இன்று வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்கு சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார்.

குறித்த விடயத்தை தாய்க்கு தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து, மயக்கமடைந்த தந்தையை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சயனைட் அருந்தியதால் அவரது மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version