இலங்கை

24 மணிநேரத்தில் 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published

on

24 மணிநேரத்தில் 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

  நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தின் போது ஏற்படும் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக பதில் பொலிஸ்மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதன்படி, கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 49 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , வீதி அனுமதிப்பத்திரம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 7,676 சாரதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version