இலங்கை

இலங்கை காவல்துறையின் சமூக ஊடக பக்கங்கள் வழமைக்கு திரும்பின!

Published

on

இலங்கை காவல்துறையின் சமூக ஊடக பக்கங்கள் வழமைக்கு திரும்பின!

இலங்கை காவல்துறையின் யூடியூப் சேனல் உட்பட பல உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பான சமீபத்திய நிலைமை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube மற்றும் x கணக்குகள் 30.12.2024 அன்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. 

Advertisement

உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram மற்றும் x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொலிஸ் யூடியூப் சேனல் இன்னும் இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

அதை உண்மையாக்கும் பணியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

 இந்த இணையத் தாக்குதல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version