இலங்கை

பரீட்சை திருப்திகரமாக இல்லை.. யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி!

Published

on

பரீட்சை திருப்திகரமாக இல்லை.. யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி!

யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் இம்முறை இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்றியிருந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த மாணவி நேற்றையதினம் (30-12-2024) பரீட்சைக்கு தோற்றி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று இடம்பெற்ற பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய், தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார்.

Advertisement

பின்னர் அவரது தந்தை கடமை நிமிர்த்தம் வெளியே சென்றவேளை, குறித்த மாணவி வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் எனவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டடுள்ளர்.

Advertisement

இதனைடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version