இலங்கை

பிள்ளைகள் வெளிநாட்டில்; யாழில் தனிமையில் வசித்த தந்தை உயிரிழப்பு

Published

on

பிள்ளைகள் வெளிநாட்டில்; யாழில் தனிமையில் வசித்த தந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று (30) வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் உச்சிக்காடு, கரணவாய்  பிரதேசத்தை சேர்ந்த  65 வயதான  நபர் என  கூறப்படுகின்றது. 

Advertisement

உயிரிழந்தவரின் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர், தனிமையில் வசித்து இருந்த நிலையில் நேற்று (30) கட்டிலில் உயிரிழந்த நிலையில்  காணப்பட்டுள்ளார்.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்க்கு சென்ற கரவெட்டி மரண விசாரணை அதிகாரி  விசாரணைகளை மேற்கொண்டு பிரேத சோதனைக்கு உத்தரவிட்டார்.

மேலும் சம்பவம்  தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version