இலங்கை
பொலன்னறுவை விபத்தில் ஐவர் காயம்!
பொலன்னறுவை விபத்தில் ஐவர் காயம்!
பொலன்னறுவை, வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
அரிசி மூடைகளை ஏற்றிச்சென்ற லொறியும் வெற்றிலைகளை ஏற்றிச்சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் வெலிகந்த மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.