இலங்கை

பொலிஸாருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Published

on

பொலிஸாருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

எதிர்வரும் புத்தாண்டு அல்லது வேறு விசேட தினங்கள் மற்றும் பண்டிகைகளின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாழ்த்து தெரிவிப்பதற்காக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பிலான விசேட சுற்று நிருபம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான பண்டிகை நாட்களில் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரிசுப் பொருட்களுடன் வாழ்த்து கூறுவது வழமையாகியுள்ளதாகவும் 

இனிவரும் காலங்களில் அவ்வாறு பரிசுப் பொருட்களை வழங்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் 

Advertisement

தாம் உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து கூற வேண்டுமாயின் தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி ஊடாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும் எனவும்  பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.[ஒ] 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version