இலங்கை

மொட்டுக் கட்சி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Published

on

மொட்டுக் கட்சி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடைந்து விட்டதாகவும் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்று எவரும் கனவு காணக்கூடாது எனவும் மொட்டு மீண்டும் மலரும் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை எவராலும் சிதைக்க முடியாது. அது மீண்டெழும்.

எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி பலத்தைக் காட்டும்.

பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது ஆட்சியில் இல்லாததன் அருமையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

எமது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்துவோம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version