இலங்கை

ரயில்வே துறை வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு : பயணிகளின் கவனத்திற்கு!

Published

on

ரயில்வே துறை வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு : பயணிகளின் கவனத்திற்கு!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான சிறப்பு அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. 

 ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

 ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயிலுக்குள் நுழைவுச் சீட்டைச் சரிபார்க்கும் போது டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

 ஜனவரி 1 ஆம் திகதிமுதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகளை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது டிக்கெட் உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு பாஸ்போர்ட்டின் நகலை ரயில் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version