இலங்கை

உணவு பொதிகளின் விலைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published

on

உணவு பொதிகளின் விலைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

நாட்டில் அரிசி விலை அதிகரிப்பால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படும் என அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் இன்றையதினம் (02-01-2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது நிலவும் அரிசி நெருக்கடி காரணமாக அநுராதபுரத்தில் உள்ள உணவகங்கள் மூடப்படும் நிலையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதியும், 580 மெற்றிக் தொன் கொண்ட இரண்டாவது தொகுதியும் நேற்று நாட்டை வந்தடைந்தன.

Advertisement

இதன்படி, விநியோக நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவடைய உள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version