இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் போலித் தகவல்கள்; மக்களுக்கு எச்சரிக்கை

Published

on

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் போலித் தகவல்கள்; மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

பயண பொதிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் செயற்பாடு விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமற்ற சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இணையத்தளங்களில் உரிமை கோரப்படாத பொதிகள் விற்பனைக்கு வழங்கும் பதிவுகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

என்வே இந்த மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற விளம்பரங்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version