இலங்கை

குருநாகலில் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

Published

on

குருநாகலில் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

குருநாகலில் வயிலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் (01-01-2025) நாரம்மல, ரணாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

குறித்த சம்பவத்தில் நாரம்மல, ரணாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

Advertisement

இதனால், இளைஞனின் உறவினர்கள் இது தொடர்பில் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து காணாமல் போன இளைஞனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது வயலிலிருந்து இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version