இலங்கை

பணியாளர்கள் பற்றாக்குறையால் தொடரும் ரயில் தாமதங்கள்!

Published

on

பணியாளர்கள் பற்றாக்குறையால் தொடரும் ரயில் தாமதங்கள்!

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட புகையிரதத்தின் பிரதான பிரிவுகளில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ரயில் தாமதங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணியாளர்கள் பற்றாக்குறையாலும், ரயில் இயந்திரங்கள் கிடைக்காததாலும் நாளொன்றுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்ய வேண்டியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

தினமும் 390 ரயில்கள் இயக்கப்பட வேண்டியிருந்தாலும், இந்த பற்றாக்குறையால், 346 ரயில்களுக்கு மட்டுமே ரயில் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 150 ரயில் ஓட்டுனர்கள், 120 கட்டுப்பாட்டாளர்கள், 600 தொழிநுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்படுகிறது.

பணியாளர்கள் பற்றாக்குறையால் இயந்திர பராமரிப்பு பணி தாமதமாகி வருவதாகவும், பராமரிப்பு பணிக்காக தற்போது 30-40 இயந்திரங்கள் பராமரிப்பு பிரிவுகளில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

தற்போது நிலவும் பணியாளர் பற்றாக்குறை குறித்து அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version