இலங்கை

மாத்தறை சிறைச்சாலையில் மரம் விழுந்ததில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

Published

on

மாத்தறை சிறைச்சாலையில் மரம் விழுந்ததில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொது மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கைதி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்த மருத்துவமனை பேச்சாளர், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் சில கைதிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

ஆண் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவமனை பேச்சாளர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் ஆண் கைதிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை சிறைச்சாலையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் மீது நேற்று (01) இரவு 10.00 மணியளவில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதுடன், படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version