இலங்கை

முன்னாள் அரசியல்வாதியின் சட்டவிரோத அதிசொகுசு வாகனங்கள் பறிமுதல்!

Published

on

முன்னாள் அரசியல்வாதியின் சட்டவிரோத அதிசொகுசு வாகனங்கள் பறிமுதல்!

மேல் மாகாணத்தின் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 4.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாகனங்கள் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதில், இராணுவ ஜீப் போன்ற வாகனம் ஒன்று காணப்படுவதாகவும்,  

அது வெளிநாடுகளில் உள்ள ஆயுதப்படையினரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரத்மலானை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இடமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சொகுசு ஜீப் வண்டிகளும், சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு ஒருங்கினைக்கப்பட்டுள்ளதாகவும் , விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version