இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உறக்கத்தில் மரணம்

Published

on

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உறக்கத்தில் மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

குறித்த பெண் நேற்று காலை 9 மணியளவில் உணவு அருந்திவிட்டு படுத்துறங்கியுள்ளார். அதன்பின்னர் குறித்த பெண்ணின் தாயார் மதிய உணவுக்காக அவரை எழுப்பியவேளை அசைவற்று காணப்பட்டார்.

இதனையடுத்து அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version