இலங்கை

யாழ். நீதிமன்றுக்கு முன்னால் வைத்து சாட்சியை வாளால் வெட்ட முயன்ற பிரதான சந்தேகநபர் கைது!

Published

on

யாழ். நீதிமன்றுக்கு முன்னால் வைத்து சாட்சியை வாளால் வெட்ட முயன்ற பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; வாள்வெட்டு வழக்கு ஒன்றின் சாட்சிக்காக கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வந்த நபரை, நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து வாளால் வெட்டி தாக்க முற்பட்ட மூவரில் இருவர் அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தக்கு அருகாமையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவருக்கு வாள்வெட்டு தொடர்பாக மூன்று திறந்த பிடியாணை உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version