இலங்கை
2025ல் இலங்கையை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!
2025ல் இலங்கையை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!
2025 ஆம் ஆண்டின் முதலாவது பயணிகள் கப்பல் இன்றையதினம் (02-01-2025) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன்படி, ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
குறித்த கப்பல் 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் பிரவேசித்துள்ளது.
இலங்கையை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
எய்ட்கன் ஸ்பென்ஸ் பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் இன்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.