இலங்கை

இரவு நேர களியாட்ட விடுதி திடீர் சுற்றிவளைப்பு

Published

on

இரவு நேர களியாட்ட விடுதி திடீர் சுற்றிவளைப்பு

 கடவத்தை நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் நேற்று (03) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

05 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களே கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version