இலங்கை

பெண் அதிகாரிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

Published

on

பெண் அதிகாரிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

நுரைச்சோலையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் அதிகாலையில் பிரவேசித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நுரைச்சோலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (2ம் திகதி) நுரைச்சோலை பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருந்த இடத்திற்குள் ஒருவர் நுழைந்துள்ளதாக நிலையத் தளபதிக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேகநபர் அண்மையில பொலிஸில் இணைந்து கொண்ட பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் கல்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version