இலங்கை

யாழில் வயல் கிணற்றுக்குள் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

Published

on

யாழில் வயல் கிணற்றுக்குள் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் கிணறொன்றுக்குள்ளிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் நேற்று  மாலை மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

அங்குள்ள வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள், வயல் கிணற்றுக்குள் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version