உலகம்

கொலம்பியாவில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து – 13 பேர் உயிரிழப்பு!

Published

on

கொலம்பியாவில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து – 13 பேர் உயிரிழப்பு!

கொலம்பியாவில், சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் 30க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்தே விபத்துக்குள்ளானது. 

Advertisement

இவ்விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்த்தனர். 

மேலும், இவ் விபத்துக் குறித்து அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version