உலகம்

தொப்பூர் அருகே கோர விபத்து

Published

on

தொப்பூர் அருகே கோர விபத்து


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 05/01/2025 | Edited on 05/01/2025

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கட்டமேடு என்ற பகுதியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா பதிவெண் எண் கொண்ட காரில் நான்கு பேர் திருநெல்வேலி நோக்கி பயணத்த நிலையில், லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த வில்லியம் ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

விபத்தில் சிக்கிக் கொண்ட கார் முழுவதுமாக சேதமடைந்ததால் கிரேன் மூலம் கார் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். விபத்தை ஏற்படுத்திய லாரி நெல் மூட்டை ஏற்றி வந்ததோடு, அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • தொப்பூர் அருகே கோர விபத்து

  • ‘அடுத்த 6 நாட்களுக்கு மழை’ -வானிலை ஆய்வு மையம் தகவல்

  • கரடி தாக்கி முதியவர் உயிரிழப்பு

  • ‘கருப்பு துப்பட்டாவிற்கு அனுமதி மறுப்பு?’- முதல்வர் நிகழ்ச்சியில் சர்ச்சை

  • ‘நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை’- பாமக ராமதாஸ் வேதனை

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version