உலகம்

அமெரிக்காவின் பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிப்பு!

Published

on

அமெரிக்காவின் பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிப்பு!

அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்த பனிப்புயல் நிலைமை அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என அந்நாட்டின் தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, பனிப்புயல் அபாயம் காரணமாக, வர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய இடங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயலுடன் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு கடந்த ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மிக மோசமான பனிப்பொழிவாக இருக்கலாம் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, பிரித்தானியாவின் பல பகுதிகள் குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 11 பாகை செல்சியஸை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தின் பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மான்செஸ்டர், பர்மிங்காம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் சுமார் 25 செ.மீ பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

இதேவேளை, ஜேர்மனியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version