உலகம்

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Published

on

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 07/01/2025 | Edited on 07/01/2025

திபேத்- நேபாளம் எல்லை பகுதியில் இன்று (07-01-25) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.  இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. 

இதனை தொடர்ந்து, நேபாளம், திபெத், சீனா ஆகிய எல்லைப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால், அதில் பல பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வட இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசம், பூடான், நேபாளம், சீனாவிலும் இந்த நிலநடுக்கம் எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருக்கும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • திருச்சி மத்திய மண்டல ஜ.ஜியாக பொறுப்பேற்று கொண்டார் ஜோஷி நிர்மல் குமார்!

  • குடிநீர் ஏரியில் குப்பை கிடங்கு; மக்களின் அடிமடியில் கைவைக்கும் ஊராட்சி நிர்வாகம்!

  • இன்றைய ராசிபலன் – 07.01.2025

  • நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

  • தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version