விளையாட்டு
தரமான ஃபார்மில் ஜெய்ஸ்வால்… சாம்பியன்ஸ் டிராபிக்கு ஓபனிங் பேட்ஸ்மேனாக தகுதியானவரா?
தரமான ஃபார்மில் ஜெய்ஸ்வால்… சாம்பியன்ஸ் டிராபிக்கு ஓபனிங் பேட்ஸ்மேனாக தகுதியானவரா?
யஷஸ்வி ஜெய்ஸ்வால், தான் அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்குள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சூறாவளியாக வீசி வருகிறார். டெஸ்ட் போட்டிக்கு வருவதற்கு முன்பு, அவர் ஒயிட்-பால் போட்டிகளில் தனது திறமைகளை நிரூபித்தார். இடது கை ஆட்டக்காரரான அவர் தனது 17 வயதில், செப்டம்பர் 2019 இல் வங்காளதேச யு-23 அணிக்கு எதிராக தனது லிஸ்ட் ஏ அறிமுகமானார். ஒரு மாதம் கழித்து விஜய் ஹசாரே டிராபியில், அவர் களமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஜெய்ஸ்வால் ஆறு இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம், மூன்று சதங்களுடன் 564 ரன்கள் அசத்தி இருந்தார். இதில், அவர் இரட்டை சதம் அடித்து எடுத்த 203 ரன்களும் அடங்கும். மேலும் லிஸ்ட் ஏ போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்கிற சாதனையை படைத்தார்.ஆங்கிலத்தில் படிக்கவும்: Is in-form Yashasvi Jaiswal a worthwhile option as opener for India in Champions Trophy?ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் டி20 மற்றும் ரெட் -பால் போட்டிகளில் சிறப்பாக முன்னேறியுள்ளார். 150.23 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,000 டி -20 ரன்கள் மற்றும் 62.40 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,682 முதல்-தர ரன்களை எடுத்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு, அவர் 36 இன்னிங்ஸ்களில் 1,798 ரன்கள் எடுத்துள்ளார். விரேந்திர சேவாக் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளனர்.ஒருநாள் போட்டி குறை சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், 50 ஓவர் போட்டிக்கான இந்தியாவின் தயார்நிலை குறித்து அனைவரது கவனமும் விரைவில் மாறும். டாப் ஆர்டரின் பரிதாபகரமான ரெட்-பால் பார்ம் அவர்களின் ஒயிட்-பால் ஆட்டத்தில் பரவாது என்ற நம்பிக்கை அளிக்கும். அதாவது, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் மோசமாக செயல்பட்டபோதிலும், 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு மற்றொரு ஐ.சி.சி சாம்பியன்ஷிப்பிற்காக இந்தியாவின் ஒருநாள் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக இணைவார்கள். ஆனால், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் ஜெய்ஸ்வாலை ஆடும் லெவன் அணிக்குள் கொன்டுவர சாத்தியமான வாய்ப்பு உள்ளது.சுவாரஸ்யமாக, இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், இன்னும் ஒருநாள் அணியில் அறிமுகமாகவில்லை. அத்துடன் நவம்பர் 2022 முதல் லிஸ்ட் ஏ ஆட்டத்தில் விளையாடவில்லை. துபாயில் பிப்ரவரி 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஜெய்ஸ்வால் அதற்கு தயாராக இருக்கிறார். ஆனால் ரோகித் மற்றும் கில் சிறந்த 50 ஓவர் சாதனையைப் பெற்றிருப்பதால், அந்த ஜோடியை உடைப்பது பற்றி தேர்வாளர்கள் தைரியமான முடிவு எடுக்க வேண்டும். 2023 ஒருநாள் உலகக் கோப்பை, ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சில மாதங்களுக்குள் வந்தது. மேலும், ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் இந்திய அணியின் பேக்-அப் விக்கெட் கீப்பராக அவர் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் 23 வயதான அவரின் முதிர்ச்சியும் வரம்பும் இப்போது அணியிலும் அதற்கு அப்பாலும் ஒரு இடத்தைப் பெற போதுமானவையாக உள்ளது. அதனால், சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போனால், சிறந்த ஃபார்மில் இருக்கும் அவருக்கு நியாயமற்றது. அதேநேரத்தில், பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பது சற்று கடினம் தான்.25 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய ரோகித் மற்றும் கில் ஜோடி 72.16 என்ற சராசரியில் 1,732 ரன்களைச் சேர்த்துள்ளனர். கில் 48 ஆட்டங்களுக்குப் பிறகு 58.20 சராசரி மற்றும் 101.74 ஸ்டிரைக் ரேட்டுடன் ரோகித்தை நிறைவு செய்கிறார். பிப்ரவரி தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் சோதிக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் டிபென்ஸ் மற்றும் ஸ்ட்ரோக்பிளே ஆகியவற்றில் அவரது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவரது செயல்திறன் தெளிவாகத் தெரிந்தது.இதற்கு நேர்மாறாக, நாக்பூர் மற்றும் கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கில் கழற்றி விடப்பட்டால், அவர் டெஸ்ட்டில் இந்தியாவிற்கு இன்றியமையாத நம்பர் 3 அல்ல என்பதை உணர்ந்த சிறிது நேரத்திலேயே, மற்றொரு பின்னடைவை சந்திக்க நேரிடலாம். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி என்பது பி.சி.சி.ஐ-யின் துணைத் தலைவர் தேர்வு மூலம் தெளிவாக வெளிவரலாம். கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு கில் ரோகித் தலைமையிலான அணியில் துணை கேப்டனாக இருந்தார். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் அந்தப் பதவியை தக்கவைப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டால், துபாயில் ரோகித்துடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க ஜெய்ஸ்வால் தகுதியான போட்டியாளர் என்ற சரியான வாதம் எழும்.இந்தியாவின் கடினமான கலவைஜெய்ஸ்வாலை இந்தியா கொண்டு வர முயற்சித்தால், அவர்கள் டாப் ஆடரில் உள்ள 6 வலது கை பேட்ஸ்மேன்கள் என்கிற பேட்டிங் வரிசையை உடைக்கலாம். கடந்த ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இடது கை ஆல்-ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோருடன் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மற்றும் அக்சர் படேல் அவ்வப்போது டாப் ஆடரில் களமாடி இருந்தார். ஆனால் ஒரு முழு பலம் கொண்ட ஒருநாள் அணி கூடும் போது, பேட்டிங் வரிசையானது விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே .எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை டாப் 3-6 என்ற கணக்கில் வலது கை ஜோடியான ரோகித் மற்றும் கில் ஆகியோருக்குப் பின்னால் இருக்கும்.ஹர்திக் பாண்டியாவைத் தவிர, ஷ்ரேயாஸ் ஐயரோ அல்லது ராகுலோ தங்கள் தற்போதைய இடங்களை விட குறைவாக பேட் செய்ய முடியாது. ஒரு ஃப்ளோட்டர் வரிசையில் மேலே செல்லும் நிகழ்வுகளில், ஒரு டெம்ப்ளேட் தலைமை பயிற்சியாளர் கவு தம் கம்பீர் அவர் பொறுப்பேற்ற ஒவ்வொரு மூன்று ஒருநாள் போட்டிகளின்போதும் அதனை செய்தார். 27 ஆண்டுகளில் இலங்கையில் நடந்த முதல் தொடர் தோல்வியின் போது இந்தியா 30 விக்கெட்டுகளில் 27 விக்கெட்டை ஸ்பின்னர்களிடம் இழந்தது, ஒன்று அல்லது இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் எப்போதாவது ஐயர் மற்றும் ராகுலை நம்பர்.4-5 க்கு முன்னால் வந்தனர்.அத்தகைய சூழ்நிலையில், ஜெய்ஸ்வாலைச் சேர்ப்பது ஐயரின் பேட்டிங் வரிசை உறுதிசெய்யப்படலாம், கோலி 3வது இடத்தை பிடிக்கலாம். மற்றும் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்கலாம். இலங்கையில் சுழற்பந்து வீச்சுக்கு எதிரான இந்தியாவின் மோசமான செயல்பாடு அணியின் சிந்தனையாளர்களின் மனதில் இருக்கும். மற்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாடும் போது, இந்தியாவின் வியூகம் துபாய் ஆடுகளங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 2020 முதல் குறைந்தது ஐந்து ஒருநாள் போட்டிகளை நடத்திய 48 மைதானங்களில், துபாயில் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 67.05 ஆக உள்ளது, இது தரவரிசையில் 47வது இடத்தில் உள்ளது.ஜெய்ஸ்வாலின் இடது கை மற்றும் பல பேட்டிங் திறன்கள் 15 பேர் கொண்ட அணியில் பேக்-அப் தொடக்க வீரர் என்பதை விட அதிக மதிப்பைக் கொண்டிருக்கும்.