இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டம்: ஏன் இன்னும் நீக்கவில்லை – அரசிடம் சஜித் சரமாரிக் கேள்வி!

Published

on

பயங்கரவாதத் தடைச்சட்டம்: ஏன் இன்னும் நீக்கவில்லை – அரசிடம் சஜித் சரமாரிக் கேள்வி!

எதிர்க்கட்சியில் நீங்கள் இருந்தபோது கடும் எதிர்ப்பை வெளியிட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் எதற்காக நடைமுறையில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

நாட்டில் அன்று இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1979ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாடாகத்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம்  கொண்டுவரப்பட்டது. 3 தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவடைந்த நிலையில், 15 வருடங்களுக்கு மேலாகியும் இந்த சட்டம் நீக்கப்படாமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.

மேற்படி சட்டமானது, அரசியல் எதிர்கருத்து கொண்டோர், அரசுக்கு எதிரான போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சர்வதேச சட்டங்கள் மற்றும் சமவாயங்கள் மீறப்படுகின்றன.

நாட்டை தற்போது ஆள்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் கதைத்துள்ளனர். எனவே, இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்த தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்’ – என்றார்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version