இலங்கை

கடவுச்சீட்டு குற்றச்சாட்டு : டயனா கமகேவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Published

on

கடவுச்சீட்டு குற்றச்சாட்டு : டயனா கமகேவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

போலி ஆவணங்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்தக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

Advertisement

அப்போது பிரதிவாதியான டயானா கமகே, தான் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்று கூறினார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ஷனக ரணசிங்க, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பி, இந்த வழக்கு அடிப்படையாகக் கொண்ட ஆவணம் 2003 இல் தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.

இருப்பினும், இந்த வழக்கு 2024 இல் தாக்கல் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வழக்கறிஞர், அதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், தொடர்புடைய ஆவணம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று வாதிட்டார்.

Advertisement

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த விஷயம் விசாரணையின் போது பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, வழக்கை மார்ச் 5 ஆம் திகதிவிசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version