இலங்கை

மயானம் நோக்கி பயணித்தவர் கிழே விழுந்து மரணம்

Published

on

மயானம் நோக்கி பயணித்தவர் கிழே விழுந்து மரணம்

 அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அநுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

இவர் நேற்று (09) மாநகர சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்றின் பின்பகுதியில் நின்றுகொண்டு புத்த கயா மாவத்தையில் இருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே தவறி விழுந்துள்ளார்.

இதில் காயமடைந்தவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபைக்குச் சொந்தமான கழிவுகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version