இந்தியா

பனியால் முடங்கிய தலைநகரம்!

Published

on

பனியால் முடங்கிய தலைநகரம்!

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்திய தலைநகர் புதுடில்லியின் ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் காற்றின் தரம் பூச்சியமாக பதிவாகியுள்ளதென இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

அதிக பனிமூட்டம் மற்றும் வளி மாசடைவு காரணமாக 150க்கும் அதிகமான விமானப் பயணங்களில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இந்தியா இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பது வழக்கமாகும்.

மனித செயற்பாடுகள் காரணமாகவும் காற்று மாசடைவு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் அவை தோல்வியடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version