இந்தியா

உத்தரபிரதேசத்தில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகள் கடும் இறுக்கம்!

Published

on

உத்தரபிரதேசத்தில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகள் கடும் இறுக்கம்!

உத்தரபிரதேசத்தில் வீதி விபத்துகள் அதிகரித்து உள்ள நிலையில் விபத்துகளை குறைக்க வீதி விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதில் இரு சக்கர வாகன சாரதிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதுடன் இதற்காக தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகன சாரதிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் போக்குவரத்து ஆணையாளர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பியுள்ளதுடன் வீதிப்பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version