இலங்கை

எரிபொருள் வரி தொடர்பில் விசேட வர்த்தமானி!

Published

on

எரிபொருள் வரி தொடர்பில் விசேட வர்த்தமானி!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தாது, அதேநிலையில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 72 ரூபாவும், ஒரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கு 50 ரூபாவும், சூப்பர் டீசலுக்கு 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 2025 ஜனவரி 11ஆம் திகதி முதல் தொடர்புடைய வரிகள் அதே முறையில் பேணுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version