இலங்கை

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!

Published

on

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!

கண்டி தவுலகல பகுதியில்  கடந்த சனிக்கிழமை தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் உள்ள பேருந்து ஒன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், நேற்றிரவு குறித்த  இருவரும் அம்பாறை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவியை பொலிஸார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version