இலங்கை

வழிப்பறி கொள்ளையில் பொலிஸ் கான்ஸ்டபிள் !

Published

on

வழிப்பறி கொள்ளையில் பொலிஸ் கான்ஸ்டபிள் !

  வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வீதியில் பயணிக்கும் பொதுமக்களின் தங்க நகைகளை கொள்ளையிடுவதாக ஹங்வெல்ல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இதனையடுத்து, தும்மோதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version